மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது மோதிய தனியார் பேருந்து..! இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி, பேருந்தை அடித்து உடைத்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது மோதிய தனியார் பேருந்து..! இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி, பேருந்தை அடித்து உடைத்த மக்கள்..

மட்டக்களப்பு - தாழங்குடாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலய வீதியை சேர்ந்த 24 வயதுடைய துலக்ஸன் மற்றும் 20 வயதுடைய நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தினை தொடர்ந்து பொதுமக்களினால் பஸ் தாக்கப்பட்டதுடன் பஸ் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு