ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு நாளை தொடக்கம் நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..! வடகிழக்கு இளைஞர்களுக்கு எப்போது..?

ஆசிரியர் - Editor I
ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு நாளை தொடக்கம் நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..! வடகிழக்கு இளைஞர்களுக்கு எப்போது..?

ஐனாதிபதியின் ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் நியமனம் நிறுத்தப்பட்டது தொடர்பாக தொடர்ந்தும் அரசு மெளனம் சாதித்துக் கொண்டிருக்கிறது.

குறித்த 1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யும் முறையில் சில தவறுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டு நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மீளாய்வு நடத்தப்படும் என கூறப்பட்டபோதும் அதற்கான நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக மெளனம் சாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் வடகிழக்கு தவிர்ந்த மற்றய மாகாணங்களில் நியமனங்கள் நாளை 2ம் திகதி தொடக்கம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்வு செய்யப்பட்டு நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் தமக்கான நியமனம் எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு