15 வயதான பாடசாலை மாணவன் வெட்டி கொலை..! 5 ரவுடிகள் இதுவரை கைது, 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்களாம்..

ஆசிரியர் - Editor I
15 வயதான பாடசாலை மாணவன் வெட்டி கொலை..! 5 ரவுடிகள் இதுவரை கைது, 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்களாம்..

மட்டக்களப்பில் 15 வயதான பாடசாலை மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழு ரவுடிகள் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பாடசாலையில் குறித்த ரவுடி கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் உறவினர்களுடன் நியாயம் கேட்க சென்றபோதே சிறுவன் வெட்டி கொல்லப்பட்டதுடன், 

உறவினர்களும் வாள்வெட்டுக்கு இலக்காகியிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரு ரவுடிகளும், நேற்றய தினம் 3 ரவுடிகளும் கைது செய்யப்பட்டிருப்பதுடன், 

குறித்த ரவுடிகள் “003” என்ற குறியீட்டுடன் தொடர்ந்து பல்வேறு ரவுடித்தனங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் 19 - 23 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் கூறுகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு