வாள்வெட்டு குழு ரவுடிகள் இல்லாத சூழலை உருவாங்குங்கள்..! வெட்டி கொல்லப்பட்ட 15 வயது மாணவனின் சடலத்துடன் மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I

பாடசாலை தகராறினால் வெட்டி கொல்லப்பட்ட 15 வயதான மாணவனின் சடலத்தை வீதியில் வைத்து ”வாள்வெட்டு குழுக்களை அழித்து மக்கள் அச்சமற்று வாழும் சூழலை உருவாக்குங்கள்” எனக்கோரி மக்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். 

மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவனின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.

இதன்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாள் வெட்டுக் குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 


ரவுடிகளிடம் இருக்கும் வாள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு