மாணவர்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல்..! 14 வயதான மாணவன் வெட்டி கொலை, உறவினர்கள் இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

மாணவர்களுக்கிடையிலான மோதல் வாள்வெட்டில் முடிந்த நிலையில் 14 வயதான மாணவன் ஒருவன் வெட்டி கொல்லப்பட்டுள்ளான். 

இந்த சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு -கொம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

செங்கலடி பிரதேசத்திலுள்ள பாடசாலை கல்வி பயிலும் செங்கலடி மற்றும் கொம்மாதுறை பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள் வெட்டுக்குள்ளான செங்கலடியை சந்தை வீதியைச் சேர்ந்த 14 வயதான மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது உறவினர்களான இருவரும் வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் மாணவனின் சடலத்தை சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

காயங்களுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர். இச்சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் 

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வாள் ஏறாவூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு