ஆட்டோவுக்கு காசு கொடுக்க மறுத்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஆட்டோ சாரதி தன்னை தாக்கியதாக பொய் முறைப்பாடு கொடுத்தார்..! குடும்ப பெண் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I

ஆட்டோவுக்குரிய வாடகை பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவன் கைது செய்யப்பட்டிருப்பதான ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மனைவி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை ஆட்டோவில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் ஆட்டோ சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆட்டோ சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் 

தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார். ஆட்டோவில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் 

என்று முறையிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு