யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல்..! ஆட்டோ ஓட்டுனர் கைது..

ஆசிரியர் - Editor I

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று காலை யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

யாழ்.பஸ் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 

சிவில் உடையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு கேட்டபோது, அதிகமான காசு சொல்லியிருக்கின்றார்கள். 

காசு அதிகம் என்ற காரணத்தினால், அவர் ஆட்டோ வேண்டாம் என கூறிவிட்டுச் சென்ற போது, அவரை கிண்டல் அடித்துள்ளனர்.

அதன்போது, ஏன் கிண்டல் அடிக்கின்றீர்கள் என கேட்டதற்கு, பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில், 

தாக்குதல் மேற்கொண்ட பிரதான நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரை 

யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு