யாழ்.வட்டுக்கோட்டை - தொல்புரம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை - தொல்புரம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

யாழ்.வட்டுக்கோட்டை - தொல்புரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்து நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் வீட்டில் இருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகைகள் 

களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.குறித்த வீட்டின் கூரை ஓட்டினை கழட்டி உள்நுழைந்த திருடர்கள் நகைகளை திருடி உள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு