வீதியால் சென்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு..! இளைஞன் வைத்தியசாலையில், வாள்வெட்டு குழு தப்பி சென்றது..

ஆசிரியர் - Editor I

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் வீதியால் சென்றவரை வழிமறித்த வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. 

இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை 

வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு