3 பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து மரணம்..! யாழ்.சுன்னாகம் பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சுன்னாகம் பகுதியில் கூலி வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்த்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. 

புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த 43 வயதான உ. சதிஸ் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென குறித்த நபர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கத்தை தெளிய வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்ட போதிலும் அவர் மயக்கத்திலிருந்து மீளாததால் 

வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு