கிணற்றடியில் முகம் கழுவ சென்ற மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கிணற்றடியில் முகம் கழுவ சென்ற மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழ்.அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

விக்னேஸ்வரன் சிவபாக்கியம் வயது 77 என்றுஅச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். காலை முகம் கழுவுவதற்கு மேற்படி மூதாட்டி கிணற்றடிக்கு சென்றுள்ளார். 

அப்போது அவர் கால் தடுக்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக அச்சுவேலி பொலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு