நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லும் 4 பிரதான வீதிகளிலும் அலங்கார வளைவுகள்..! 2வது அலங்கார வளைவுக்கு இன்று அடிக்கல்..

ஆசிரியர் - Editor I
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லும் 4 பிரதான வீதிகளிலும் அலங்கார வளைவுகள்..! 2வது அலங்கார வளைவுக்கு இன்று அடிக்கல்..

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லும் 4 பிரதான வீதிகளிலும் அலங்கார வளைவுகள் அமைக்கப்படவுள்ளது. இதன்படி தெற்கு புறத்திலுள்ள வீதியில் அலங்கார வளைவு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. 

கிழக்குப்புறத்தில் உள்ள செம்மணி வீதியில் வீதி வளைவு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தெற்குப்புறமான வீதி வளைவு கோவில் வீதியில் கைலாச பிள்ளையார் கோவிலடியில் அமையவுள்ளது. 

இந்த வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் ஆகம வழிபாடு இன்று காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது. நல்லூர் சிவாச்சாரியார், ஆன்மீக பெரியோர்கள், ஆலய தொண்டர்கள் என பலர் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு