டோனி இஸ்ரப்படும்வரை சென்னைக்காக விளையாடலாம்!!

ஆசிரியர் - Editor III
டோனி இஸ்ரப்படும்வரை சென்னைக்காக விளையாடலாம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திரசிங் டோனி விரும்பும் வரை விளையாடலாம் என்று என்.சீனிவாசன் அறிவித்துள்ளார். 

டோனி கடந்த சனிக்கிழமை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான என்.சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டோனி விரும்புகிற காலம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம். தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். 

போட்டியை தவிர்த்து வேறு எதனை பற்றியும் ஒருபோதும் டோனி சிந்திக்காதது தான் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாகும். அந்த கொள்கையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் என்றார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு