மக்களவை தேர்தலில் டோனி!! -பா.ஜ.க தலைவர் சுப்ரமணியன் சுவாமி-

ஆசிரியர் - Editor III
மக்களவை தேர்தலில் டோனி!! -பா.ஜ.க தலைவர் சுப்ரமணியன் சுவாமி-

ஓய்வு அறிவித்துள்ள எம்.எஸ்.டோனி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றாரே தவிர வேறு எதில் இருந்தும் அல்ல. 

முரண்பாடுகளுக்கு எதிராக போராடும் அவரது திறமையும், கிரிக்கெட்டில் அணியில் நிரூபிக்கப்பட்ட அவரது எழுச்சியூட்டும் தலைமையும் தற்போது பொதுவாழ்க்கையில் தேவைப்படுகிறது.

அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களை பொதுத்தேர்தலில் போட்டியிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு