தொலைபேசியில் கதைத்தபடி ரயில் பாதையில் நடந்து சென்றவர் மீது மோதிய ரயில்..! கால் துண்டிக்கப்பட்டு படுகாம். யாழ்.சங்கத்தானையில் இன்று அதிகாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தொலைபேசியில் கதைத்தபடி ரயில் பாதையில் நடந்து சென்றவர் மீது மோதிய ரயில்..! கால் துண்டிக்கப்பட்டு படுகாம். யாழ்.சங்கத்தானையில் இன்று அதிகாலை சம்பவம்..

யாழ்.சாவகச்சேரியில் ரயில் பாதையில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு சென்றவர் ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தொலைபேசியில் உரையாடியபடி, ரயில் பாதையில் நடந்து சென்ற குறித்த நபர் ரயில் வருவதை கண்டு சுதாகரித்து தண்டவாளத்திலிருந்து வெளியேற முயன்றபோதும், உடலின் ஒரு பகுதி விபத்தில் சிக்கியது. இதனால் அவரது காலொன்று துண்டிக்கப்பட்டது.

தென்பகுதியை சேர்ந்த சிங்கள நபரொருவரே விபத்தில் சிக்கினார். உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு