நகைக்கடை உடைத்து 10 கோடி ரூபா பெறுமதியான நகைகள், 4 லட்சம் பணம் கொள்ளை..! பெண் ஒருவர், நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் அடங்கலாக 4 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
நகைக்கடை உடைத்து 10 கோடி ரூபா பெறுமதியான நகைகள், 4 லட்சம் பணம் கொள்ளை..! பெண் ஒருவர், நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் அடங்கலாக 4 பேர் கைது..

10 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் அடங்கலாக 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல தங்கநகை விற்பனை நிலையத்தை உடைத்து சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும்

நான்கரை இலட்சம் ரூபா பணமும் கடந்த 03 ஆம் திகதி கொள்ளையிடப்பட்டுள்ளது.இதன்போது, கொள்ளையிடப்பட்ட ஏழரைக் கிலோ தங்க ஆபரணங்களும் 

இரண்டரை இலட்சம் ரூபா பணமும் இன்று பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட நகைக்கடை உரிமையாளர்களில் ஒருவர் 

ஏற்கனவே திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரையும் 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு