பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களுக்கான அறிவிப்பு..! திங்கள் கிழமை முதல் பணிக்கு திரும்புமாறு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களுக்கான அறிவிப்பு..! திங்கள் கிழமை முதல் பணிக்கு திரும்புமாறு உத்தரவு..

இலங்கையில் உள்ள சகல பல்கலைகழகங்களினதும் கல்விசார ஊழியர்கள் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பணிக்கு திரும்பவேண்டும். என மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

மானியங்கள் ஆணைக் குழுவின் கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது கல்வி சாரா ஊரியர்கள் விடயமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போதே மேற்படி தீர்மானமும் எட்டப்பட்டது. இந்த தீர்மானத்தில் கொரோனா தாக்கத்தின் பின்பு பல பல்கலைக் கழகங்களில் கல்வி சாரா ஊழியர்கள் 

முழுமையாக பணிக்கு திரும்பாத நிலமை கானப்படுகின்றது. இதற்கு ஆணைக்குழுவின் சுற்று நிரூபம் கிடைக்கவில்லை என கூறப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இவற்றினை ஆராய்ந குழு உடனடியாக குறித்த சுற்று நிரூபத்தை அனுப்புவதாக தீர்மானித்துள்ளது.ஆணைக் குழுவின் தீர்மானத்தின் பிரதிகள் திங்கட் கிழமை 

சகல பல்கலைக் கழகங்களிற்கும் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு