சென்னைக்காக 2022 வரை டோனி களமாடுவார்!!

ஆசிரியர் - Editor III
சென்னைக்காக 2022 வரை டோனி களமாடுவார்!!

மகேந்திரசிங் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2022-ம் ஆண்டு வரை  விளையாடுவார் என சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார். 

டோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் ஆவர் மேலும் தெரிவிக்கையில்:- 

இந்த ஆண்டு மட்டுமின்றி அடுத்த ஆண்டிலும் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அனேகமாக 2022 ஆம் ஆண்டு கூட அவர் சென்னை அணிக்காக விளையாடுவார். 

டோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டார் என்பதை ஊடகம் மூலமே அறிகிறேன். ஆனால் டோனி குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனெனில் தனது பொறுப்பு என்ன? தன்னையும், அணியையும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு