தலைமை என்றால் டோனிதான்!! -முரளிதரன் புகழ்ச்சி-

ஆசிரியர் - Editor III
தலைமை என்றால் டோனிதான்!! -முரளிதரன் புகழ்ச்சி-

டோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

2007 ஆம் ஆண்டு நடந்த 20-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இளம் வயது டோனி இந்திய அணிக்கு தலைமை தாங்கி கிண்ணத்தை வென்று கொடுத்தார். 

டோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் அவர் பந்துவீசுபவரின் பந்துவீச்சுக்கு ஏற்ற களத்தடுப்பு வியூகத்தை அமைப்பார் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு