திருடர்களை காட்டிக் கொடுத்ததற்காக ஒரு பிள்ளையின் தந்தை குரூரமாக வெட்டி கொலை..!

ஆசிரியர் - Editor I
திருடர்களை காட்டிக் கொடுத்ததற்காக ஒரு பிள்ளையின் தந்தை குரூரமாக வெட்டி கொலை..!

பாடசாலைக்குள் புகுந்து திருடியவர்களை காட்டிக் கொண்டிருந்த ஒரு பிள்ளையின் தந்தையான 25 வயது இளைஞன் குரூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றார். 

இந்த சம்பவம் திருகோணமலை- பூவரசன்தீவு பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாடசாலையொன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காட்டிக் கொடுத்ததமைக்காக பழிவாங்கும் நோக்கில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு