கள்ளு சீவிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்த முதியவர் பலி..! யாழ்.கோப்பாய் பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கள்ளு சீவிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்த முதியவர் பலி..! யாழ்.கோப்பாய் பகுதியில் சம்பவம்..

யாழ்.கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் தென்னை மரத்தில் கள்ளு சீவி கொண்டிருந்தபோது தவறி விழுந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் இன்று காலை 7 மணியளவில் கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லுாரிக்கு அருகில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. 

இச்சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த முத்தையா வடிவேல் 72 வயதானவரே உயிரிழந்துள்ளார்.இது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு