கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மதிலுடன் மோதி விபத்து..! வயோதிப பெண் படுகாயம்..
யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் ஆட்டோ ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆஸ்பத்திரி வீதியில் மரியன்னை தேவாலயத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
காயமடைந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.