யாழ்.எழுவைதீவில் ஈ.பி.டி.பி- ஐ.தே.க பிடுங்குப்பாடு..! தேர்தல் விதிகளை மீறி ஐ.தே.க பிரச்சாரமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுவைதீவில் ஈ.பி.டி.பி- ஐ.தே.க பிடுங்குப்பாடு..! தேர்தல் விதிகளை மீறி ஐ.தே.க பிரச்சாரமாம்..

  

யாழ்.எழுவைதீவில் ஈ.பி.டி.பி மற்றும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டிருப்பதுடன், ஐ.தே.கட்சியினரின் பெருமளவு துண்டு பிரசுரங்களை ஈ.பி.டி.பி.யினர் தீயிட்டு எரித்துள்ளனர். 

தேர்தல் பிரச்சாரத்திற்கான காலம் நிறைவடைந்த நிலையில் நேற்றய தினம் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். 

இவ்வாறு பரப்புரையில் ஈடுபடுவதனை அவதானித்த ஈ.பி.டி.பியினர் அதனை தடுக்க முற்பட்டபோதும் முடியாத நிலையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்களிடம் இருந்த அனைத்து துண்டுப் பிரசுரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

ஐ.தே.கட்சியினரிடம் இருந்து பறிமுதல் செய்த தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை ஈ.பீ.டீ.பி கட்சியினர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். மேலும் தேர்தல் விதிமுறையினை மீறிய வகையில் இரு கட்சியினரும் அடாவடியில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு