ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக கூடியிருக்கும் மக்கள். எதற்காக..? தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களுக்கு புகார்..

ஆசிரியர் - Editor I
ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக கூடியிருக்கும் மக்கள். எதற்காக..? தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களுக்கு புகார்..

யாழ்.நகரில் உள்ள ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக மக்கள் கூடியிருக்கும் நிலையில், குறித்த விடயம் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.

கட்சி அலுவலகத்தின் பிரதான கதவுகள் பூட்டப்பட்டுள்ளபோதும் மக்கள் கட்சி அலுவலக வாயிலில் நின்று கொண்டிருக்கின்றனர். 

அவர்களில் சிலருடன் பேசியபோது தாம் சமூர்த்தி பயனாளிகள் எனவும் கட்சியில் உள்ள முக்கியஸ்த்தர்களை சந்திப்பதற்காக வந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். 

இதேவேளை கண்காணிப்பு அலுவலர்கள் சென்று விசாரித்தபோது, வாக்களிப்பு நிலையங்களுக்கு கட்சி நியமிப்பவர்கள் எனவும், 

அவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கான கொடுப்பனவுகள், பெயர் பதிவுகள் இடம்பெறுவதாகவும் கட்சி அலுவலகத்திற்குள் எவரையும் அழைக்கவில்லை. 

என விளக்கமளித்ததை தொடர்ந்து கண்காணிப்பாளர்கள் திரும்பியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு