அவசரத்திற்கு பொது மலசலகூடத்தை பயன்படுத்த நினைத்த பெண்ணுக்கு நடந்த குரூரம்..! போதை ஆசாமியை அடித்து நொருக்கிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
அவசரத்திற்கு பொது மலசலகூடத்தை பயன்படுத்த நினைத்த பெண்ணுக்கு நடந்த குரூரம்..! போதை ஆசாமியை அடித்து நொருக்கிய மக்கள்..

மலசல கூடத்திற்கு சென்ற 23 வயதான பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சித்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மட்டக்களப்பு- வாழைச்சேனை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள பொது விளையாட்டு மைதானம் ஒன்றில் உள்ள பெண்களுக்கான மலசலகூடத்திற்கு சென்ற பெண்ணை, 

பின் தொடர்ந்து சென்ற போதை பழக்கத்திற்கு அடிமையான 22 வயதான முஸ்லிம் இளைஞன் ஒருவன் மலசலகூடத்திற்குள் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

இதனையடுத்து பெண் கூச்சலிட்ட நிலையில் அவருடைய தாவணியால் கழுத்தை நொித்துள்ளார். இதனை அவதானித்த பெண்ணொருவர் தனது கணவருக்கு தகவல் தொிவித்ததை தொடந்து

பெருமளவு மக்கள் அப்பகுதியில் கூடி இளைஞனை மடக்கி பிடித்ததுடன், அடித்து நொருக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துடன், பெண் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு தடயவியல் பொலிசார் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் பிறைதுறைசேனையில் வயோதிபப்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் 

பொலிசாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட இளைஞனே, இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். கைதானபோது இளைஞன் போதைப்பொருள் பாவித்திருந்தான்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு