யாழ்.கோப்பாயில் பொலிஸார் அதிரடி..! தலைதெறிக்க ஓடிய வாள்வெட்டு குழு, இருவர் கைது, வாள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் பொலிஸார் அதிரடி..! தலைதெறிக்க ஓடிய வாள்வெட்டு குழு, இருவர் கைது, வாள்கள் மீட்பு..

யாழ்.கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுக்கு தாக்குதல் நடத்த வாள்களுடன் தயாராக இருந்த வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாள்களும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கோப்பாய் பகுதியில் நேற்று இரவு சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞர் குழு ஒன்று கூடி உள்ளதாக அப் பகுதி மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது குறித்த இளைஞர் குழு அவ்விடத்தில் இருந்து தப்பித்து செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் துரத்தியதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு