கொடிகாமம் - வறணி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
யாழ்.கொடிகாமம் வறணி பகுதியில் பொலிஸாரை கண்டதும் தப்பி ஓடியபோது விபத்தில் சிக்கிய இரு இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வீதியால் தலைகவசம் அணியாமல் பயணித்தபோது பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தபோது டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.