பொலிஸாரை கண்டதும் ஓட்டம்..! கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து, இரு இளைஞர்கள் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரை கண்டதும் ஓட்டம்..! கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து, இரு இளைஞர்கள் படுகாயம்..

யாழ்.கொடியாமம்- வறணி பகுதியில் பொலிஸாரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய இரு இளைஞர்கள் டிப்பர் வாகனத்துடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவம் சற்று முன்னர் வறணி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றிருக்கின்றது. வறணி பாடசாலைக்கு அருவில் தலைகவசம் அணியாது இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். 

இதன்போது பொலிஸாரின் வாகனம் வருவதை கண்டவுடன் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளனர். கொடிகாமம் - பருத்துறை வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், 

வீதி சீரின்மையால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. சம்பவத்தில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு