பிரபாகரன் ஆயுதமேந்தும் நிலையை ஏற்படுத்தியது சிங்களத் தலைமைகளே!

ஆசிரியர் - Admin
பிரபாகரன் ஆயுதமேந்தும் நிலையை ஏற்படுத்தியது சிங்களத் தலைமைகளே!

தந்தை செல்வா மற்றும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கைத் தலைவர்கள் ஏமாற்றியிருக்காவிட்டால், வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் 70 வருடங்களாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது. தமிழினத்தின் தலைவர்களான தந்தை செல்வநாயகம் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு பலமுறை முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் தென்னிலங்கை தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து ஏமாற்றினார்கள். இவ்வாறு மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அனைத்து தென்னிலங்கை தலைவர்களும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.

இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அவை மீளப் பெறாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு நியாயமான தீர்வொன்று சமஷ்டி அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். இதனைத் தான் நாம் கோருகிறோம். நாங்கள் நாட்டை பிரிக்கப் போவதில்லை. எனவே எமது கோரிக்கைகளை நிராகரிக்காமல், பேச்சுகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

கடந்த காலத்தில் தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை தலைவர்கள் ஏமாற்றியமையால்தான், பிரபாகரன் ஆயுதமேந்தினார். அத்தகைய நிலைமை ஏற்படாமல் இருந்திருந்தால் அவர் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்.

நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குவது அவசியம். இதனை தென்னிலங்கை தலைமைகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு