நண்பி வீட்டுக்கு சென்றுவருவதாக கூறி புறப்பட்ட இளம் பெண் மாயம்..! தீவிர தேடுதலில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
நண்பி வீட்டுக்கு சென்றுவருவதாக கூறி புறப்பட்ட இளம் பெண் மாயம்..! தீவிர தேடுதலில் பொலிஸார்..

மட்டக்களப்பு இருதயபுரம் கிராமத்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் காணாமல்போயிருப்பதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

இருதயபுரம் 9 குறுக்கு வீதியைச் சேர்ந்த லோறன்ஸ் சேரா (வயது 27) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்து வருவதாகவும் சம்பவத் தினமான நேற்று காலை 10 மணிக்கு, நண்பி ஒருவரிடம் சென்று வருவதாக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். 

எனினும் அந்த பெண், நேற்று மாலை வரை வீடு திரும்பாதமையினால் அவரை குடும்பத்தினர் தேடியுள்ளனர் ஆனாலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் பெண்ணின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

 சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு