வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்படும் யாழ்.மாவட்டத்திலுள்ள உயர்நிலை அதிகாரிகள் இருவர்..! கண்காணிக்க வந்த தேர்தல் ஆணைக்குழு அதிகாரி திரும்பி சென்றார்..

ஆசிரியர் - Editor I
வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்படும் யாழ்.மாவட்டத்திலுள்ள உயர்நிலை அதிகாரிகள் இருவர்..! கண்காணிக்க வந்த தேர்தல் ஆணைக்குழு அதிகாரி திரும்பி சென்றார்..

யாழ்.மாவட்டத்தில் உயர் பதவிகளில் உள்ள இரு அதிகாரிகள் அரசியல் கட்சி ஒன்றுக்கு சார்பாக செயற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததையடுத்து மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு சாதகமாக இரு உயர் அதிகாரிகள் செயற்படுவதாகவும், குறித்த அதிகாரிகள் தமது செயலகத்தின் தகவல்களை அந்த வேட்பாளருக்கு வழங்குவதாகவும், அந்த வேட்பாளர் சார்ந்த கட்சியின் முறைகேடுகளை கவனத்தில் கொள்வதில்லை எனவும் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, 

குறித்த விடயம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனை ஆராய்ந்த ஆணைக்குழு தேர்தல் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரை யாழ்.மாவட்டத்திற்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் குறித்த அதிகாரியின் நியமனம் சந்தேகத்தை எழுப்புவதாக, 

சீ.வி.விக்னேஸ்வரனும், அவருடைய கட்சிசார்ந்த வேட்பாளர் ஒருவரும் சந்தேகம் எழுப்பியதுடன், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தது. இதனையடுத்து குறித்த அதிகாரி நேற்றய தினம் கொழும்புக்கு திரும்பி சென்றிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு