நல்லுார் ஆலயத்திற்குள் நுழையும் சகல வீதிகளிலும் சிறப்பு சோதனை சாவடிகள்..! அடையாள அட்டை அவசியம், தீவிர ஏற்பாடுகளில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
நல்லுார் ஆலயத்திற்குள் நுழையும் சகல வீதிகளிலும் சிறப்பு சோதனை சாவடிகள்..! அடையாள அட்டை அவசியம், தீவிர ஏற்பாடுகளில் பொலிஸார்..

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் கோவிலுக்கு வரும் அடியவர்கள் கட்டாயம் அடையாள அட்டை கொண்டுவரவேண்டும். என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ கூறியிருக்கின்றார். 

நாளை ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சோதனை சாவடியில் அடையாள அட்டையினை காண்பித்தே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அத்தோடு வெளிநாட்டிலிருந்து வருபவராக இருந்தால் அவர் தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர் என்ற சான்றிதழை காண்பித்த பின்னரே 

ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்.அத்தோடு அடியவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகை தர வேண்டும். அத்தோடு சுகாதார நடைமுறையினை பின்பற்றும் முகமாக கைகளை நன்றாகக் கழுவி உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அடையாள அட்டையினை காண்பித்து, அவர்களது முகம் கமராவில் பதிவு செய்யப்பட்ட பின்னரே 

ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இம்முறை நல்லூர் உற்சவமானது மிகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் பெருமளவில் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு