தெருச் சண்டியனாக மாறிய ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வலி,தெற்கு பிரதேசசபை உறுப்பினர்..! அவையில் நீண்ட குழப்பம்..
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி உறுப்பினர் ஒருவர் காட்டிய சண்டித்தனத்தால் வலி,தெற்கு பிரதேசசபையில் பெரும் குழப்ப நலை உருவாகயிருக்கின்றது.
இன்று நடைபெற்ற சபை அமர்வின்போது சுதந்திரகட்சி உறுப்பினர் ஒருவர் தவிசாளருடன் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டிருந்ததுடன்,
தவிசாளரை தாக்கவும் முயற்சித்துள்ளார். இதனால் சபையிலிருந்து வெளியேறுமாறு தவிசாளர் பணித்தபோதும் அவர் வெளியே மறுத்தமையினால், சபை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.
எனுனிம் சபையில் குழப்பம் விளைவித்த சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் தொடர்ந்தும் சபையில் அமர்ந்திருந்த நிலையில் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சபையின் தவிசாளருடன், சபையில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சி தவிர்ந்த மற்றைய கட்சிகளன கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடீபி உறுப்பினர்கள் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தினர். இதன் பின்னர் சண்டித்தனத்தில் ஈடுபட்ட சுதந்திரக் கட்சியின் தரப்பிலிருந்தும்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன்போது, தாக்க வந்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.