நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மருமகள்..! கழுத்து நொிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 3 பிள்ளைகளின் தாய்..

ஆசிரியர் - Editor I
நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மருமகள்..! கழுத்து நொிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 3 பிள்ளைகளின் தாய்..

நெஞ்சுவலியால் உயிரிழந்தாக கூறப்பட்ட 3 பிள்ளைகளின் தாய் கழுத்து நொிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டமை பிரதேச பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்கிளேயர் தோட்ட ஸ்டெலின் பிரிவில் வசித்து வந்த 54 வயதுடைய 3 குழந்தைகளின் தாய் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி இரவு நெஞ்சு வலியால் இறந்துள்ளதாக அவரது மருமகளால் பொலிஸாருக்கு தொிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். உயிரிழந்த பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளதைக் அவதானித்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதிமன்ற நீதவானுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் விசாரணைகளை ஆரம்பித்திருந்தார். இதன் போது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்ப 

நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்த பெணை கழுத்து நெரித்து கொலை செய்ததற்கான தடையங்கள் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 

தலவாக்கலை பொலிசார் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே தோட்டத்தை சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தையாவார்.இதையடுத்து சந்தேக நபரை இன்று நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக 

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு