கட்டுப்பாட்டை இழந்து இராணுவ சோதனை சாவடிக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்..! இராணுவ சிப்பாய் படுகாயம்.. யாழ்.கைதடியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து இராணுவ சோதனை சாவடிக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்..! இராணுவ சிப்பாய் படுகாயம்.. யாழ்.கைதடியில் சம்பவம்..

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் இராணுவ சோதனை சாவடி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கைதடி பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் அதி வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.அதனை கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் மறித்துள்ளார்.

இதன்போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளது.

 இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது. படுகாயம் அடைந்த இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதி இளைஞன் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு