யாழ்.நீர்வேலி, கல்வியங்காடு பகுதிகளில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல்..! 8 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலி, கல்வியங்காடு பகுதிகளில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல்..! 8 பேர் கைது..

யாழ்.கோப்பாய் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது தலைமறைவாகியிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பு தேடுதலின்போது நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த நபர்களே 

கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்வேலி மற்றும் கல்வியங்காட்டு பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு