நண்பர்களுடன் கணவன் போதை மயக்கத்தில்..! வீட்டுக்குள் சடலமாக கிடந்த 22 வயது இளம் பெண், திருமணமாகி 3 மாதங்கள்..

ஆசிரியர் - Editor I
நண்பர்களுடன் கணவன் போதை மயக்கத்தில்..! வீட்டுக்குள் சடலமாக கிடந்த 22 வயது இளம் பெண், திருமணமாகி 3 மாதங்கள்..

திருமணமாகி 3 மாதங்களில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு- ஏறாவூர் கொம்மாதுறை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 

அதே கிராமத்தைச் சேர்ந்த, தாமோதரம் தனூஜா (வயது 22) என்பவரின் சடலமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த இளம் பெண் திருமணமாகி மூன்று மாதங்களேயாவதாக அவரது உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், கணவன் மதுபோதைக்குட்பட்டவர் என்றும் ஆகையினால் தம்பதியினருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், 

இதனால் இவ்வாறு நேர்ந்திருக்கலாமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, நண்பர்களையும் அழைத்து வந்து வீட்டில் வைத்தே, கு

றித்த பெண்ணின் கணவர் மதுபோதையில் மூழ்கிக் கிடப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சடலம், பிரேத பரிசோதனைக்காக, 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு