யாழ்.மாவட்ட பெண்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்..! அளவாய் இருந்தால் ஆபத்து குறைவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பெண்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்..! அளவாய் இருந்தால் ஆபத்து குறைவு..

யாழ்.மாவட்டத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள், தங்களது ஆபரணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு குறிப்பாக அதிகளவு ஆபரணங்கள் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி நிஹால் பிரான்சிஸ் கேட்டுள்ளார். 

யாழ்.குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் கொள்ளையிடும் சம்பவம் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களினால் பதியப்பட்டுள்ளன.

அவை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இன்றும் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன் யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணியாது செல்வதன் மூலம் திருட்டு செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனினும் பொலிசாரினால் திருட்டுச் சம்பவத்துடன் 

தொடர்புடையவர்கள் நாளாந்தம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வருகின்றார்கள் எனவே இது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு