மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது மோதிய டிப்பர்..! 20 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது மோதிய டிப்பர்..! 20 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் மோதியதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

இந்த சம்பவம் வாழைச்சேனை- மாவடிச்சேனை பள்ளிவாயல் பகுதியில் இன்று மாலை 2 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது வேகமாக வந்த டிப்பர் மோதியதில் இளைஞன் உயிரிழந்துள்ளான்.

குறித்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் மாவடிச்சேனை பாடசாலை வீதியைச் சேர்ந்த நாசர் நஜாத் (வயது 20) என்பவராவார். 

உயிரிழந்த இளைஞனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, 

டிப்பர் சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு