64 கொள்ளை சம்பவங்களை செய்த கொள்ளைக்காரன் 65வது கொள்ளையின்போது அடித்தே கொல்லப்பட்ட பரிதாபம்..! ஆனைக்கும் அடி சறுக்கும்..

ஆசிரியர் - Editor I
64 கொள்ளை சம்பவங்களை செய்த கொள்ளைக்காரன் 65வது கொள்ளையின்போது அடித்தே கொல்லப்பட்ட பரிதாபம்..! ஆனைக்கும் அடி சறுக்கும்..

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வீடொன்றில் கொள்ளையிட முயன்றபோது வீட்டு உரிமையாளரின் தாக்குதலுக்கு உள்ளான கொள்ளைக்காரன் உயிரிழந்துள்ளான். 

குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பாடசாலை வீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 

48 வயதுடைய பரசுராமன் நவரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கம்கேணி பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் வீடு ஒன்றில் இருவர் கொள்ளையடிக்க சென்றுள்ளனர். 

இந்த நிலையில் கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்களை தாக்கி அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடிக்க முற்பட்டனர். 

இதன்போது தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் தனது உயிரை காப்பாற்ற கொள்ளையர் மீது தாக்கியபோது கொள்ளையன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் 

அவருடன் சென்ற கொள்ளையர் தப்பி ஓடியுள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கொள்ளையன் 63 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் 

சம்பவதினமான நேற்று பிறிதொரு வீடு ஒன்றில் கொள்ளையடித்துவிட்டு மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டபோதே உயிரிழந்துள்ளதாக 

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த குறித்த கொள்ளையனின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்

 இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு