ஐனாதிபதியின் தீர்மானம் விவசாயிகளுக்கு ஆறுதலளிக்கிறது..!

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதியின் தீர்மானம் விவசாயிகளுக்கு ஆறுதலளிக்கிறது..!

விவசாயத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால்  வெங்காய இறக்குமதிக்கான வரியை அதிகரித்தால் யாழ் மாவட்ட வெங்காய செய்கையாளர்கள் நன்மை அடைந்துள்ளனர்.

என யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான பரநிருபசிங்கம்  வரதராஐசிங்கம் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்ட வெங்காய செய்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் வாழ்வாதாரங்களையும்அதிகரிக்கப்படும் பொருட்டும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வெங்காய இறக்குமதிக்கான வரி யை 220 வரை அதிகரித்தார். 

யாழ் மாவட்டத்தில் அதிகப்படியான விவசாய நிலங்கள்  பயிற்செய்கை மேற்கொள்ளப்படாமல் காணப்படும் நிலையில் சின்ன வெங்கானத்திற்கான கேள்வி அதிகரிப்பினால் செய்கையை ஆர்வத்துடன் மேற்கொள்ளுகின்றனர்.  

யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கான  அதிக கேள்வி நிலவுகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எடுத்துக்கொண்ட முடிவானது விவசாயத்தை நம்பி வாழும் யாழ் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 

கடந்த காலங்களில் யாழ் மாவட்டத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி அதிகப்படியான மிளகாய் புகையிலை உருளைக்கிழங்கு மற்றும்  சின்ன வெங்காயம் ஆகியன பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில்  தற்போது  கடந்த காலத்தைப் போல ஏற்றுமதித் துறை விருத்தியடைந்து வருகிறது.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் தீர்க்கமான கரிசனையை கொண்டுள்ள ஒரு கட்சியாகக் காணப்படுகின்றது. நமது கட்சி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகப்படியான ஆசனங்களைப் பெறும் போது  விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர்  மக்களுக்கானஅபிவிருத்திகளை அரசிடம் கேட்டால்  மக்களுக்கான விலைபேசும் சக்தி குறைந்துவிடும் என கூறி தமது பைகளை நிரப்பிய வரலாறுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றது.  

ஆகவே  தீர்வு விடயங்களைக் கூறி தமிழ் மக்களுடைய அபிவிருத்திகளை தட்டிக் கழிப்பதற்கு நமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது  என்றைக்கும் தயாரில்லை. யாழ் மாவட்டத்தில் விவசாயத்துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நமது முதன்மை வேட்பாளரான அங்கஜனுடன் நானும் சேர்ந்து  பாடுவேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு