வாட்ஸ்ஆப்பில் ஆபாச பதிவுகளை பகிர்­வதில் இலங்­கை முன்னிலை

ஆசிரியர் - Admin
வாட்ஸ்ஆப்பில் ஆபாச பதிவுகளை பகிர்­வதில் இலங்­கை முன்னிலை

வாட்ஸ்ஆப் ஊடாக சிறுவர் ஆபாச காணொ­ளி­களை அதிகம் பகிரும் நாடாக இலங்­கை­ உரு­மாறி வரு­வ­தாக இந்­திய மத்­திய விசா­ர­ணைகள் பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. சிறு­வர்­களின் ஆபாச காணொ­ளி­களை பதி­வேற்றம் செய்யும் குழு­வொன்று அண்­மையில் இந்­தி­யாவின் டெல்­லியில் கைது­செய்­யப்­பட்­டுள்­ளது.

சிறுவர் ஆபாச காணொ­ளி­களை வாட்ஸ்ஆப் குரூப்கள் ஊடாக பகிரும் குழு­வொன்று டெல்­லியை தள­மாக கொண்டு 119 நபர்­க­ளுடன் இயங்கி வந்­துள்­ளது. இதில் சட்­ட­வி­ரோ­த­மாக பதி­வேற்றம் செய்­யப்­பட்ட சிறுவர் ஆபாச காணொ­ளிகள் ஆயிரக்கணக்கில் பதி­வி­டப்­பட்­டுள்­ள­தாக தென்­னிந்­திய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

இந்­நி­லையில் உல­க­ளா­விய குற்­ற­மாக இதனை வகுத்­துள்ள இந்­திய மத்­திய புல­னாய்வு விசா­ரணை குழு இந்த வாட்ஸ்ஆப் குழுவின் பங்­கா­ளி­க­ளான சீனா, பாகிஸ்தான், பிரேசில், ஆப்­கா­னிஸ்தான், கென்யா, நைஜீ­ரியா, மெக்­ஸிகோ, நியூஸி­லாந்து, இந்­தியா மற்றும் இலங்கை போன்ற நாடு­களை அடை­யா­ளப்­ப­டுத்தி, அந்த நாட்டு அர­சாங்­கங்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி விசா­ர­ணைகள் மற்றும் கைது­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இந்­நி­லையில் இந்­திய மத்­திய புல­னாய்வு விசா­ரணை குழு­வினால், இந்த வாட்ஸ்ஆப் குழுவின் நிர்­வா­கிகள் ஐவரை கைது­செய்­துள்­ளது. இதன்­படி கூடிய விரைவில் இது­போன்ற காணொ­ளி­களை இலங்­கை­யி­லி­ருந்து தரவேற்றம் செய்யும் மற்றும் பகிரும் சந்தேகநபர்களை இலங்கை அரசின் உதவியுடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.பி.ஐ. விடுத்துள்ள விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு