யாழ்.நகரில் தீ விபத்து..! மின் இணைப்பின் கொள்ளளவை காட்டிலும் அதிகளவு மின் பயன்படுத்தப்பட்டது காரணமா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் தீ விபத்து..! மின் இணைப்பின் கொள்ளளவை காட்டிலும் அதிகளவு மின் பயன்படுத்தப்பட்டது காரணமா..?

யாழ்.நகரில் உள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மின் இணைப்புக்களில் திடீரெ தீ பற்றிக் கொண்ட நிலையில் பொதுமக்கள், மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.

யாழ். நகரில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முன்பக்கம் உள்ள மின் இனைப்பு சாதனங்களில் தீப்பரவல் ஏற்பட்டது.இதனையடுத்து ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர்.பின்னர் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை குறித்த கட்டிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கிவரும் நிலையில்,

அங்கு பொருத்தப்பட்டிருக்கும் மின் இணைப்பு கொள்ளளவை காட்டிலும் அதிக மின் பயன்படுத்தப்பட்ட நிலையிலேயே தீ பற்றியதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு