உழவு இயந்திர சக்கரத்திற்குள் தவறி விழுந்த குடும்பஸ்த்தர் பலி..!

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திர சக்கரத்திற்குள் தவறி விழுந்த குடும்பஸ்த்தர் பலி..!

உழவு இயந்திரத்தில் நெல் மூடைகளை ஏற்றும்போது உழவு இயந்திரம் சடுதியாக நகர்ந்ததால் நிலைதடுமாறு சக்கரத்திற்குள் விழுந்த 4 பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் மட்டக்களப்பு வெல்லாவெளி - வம்மியடி ஊற்று கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நெல் மூடைகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை 

சாரதி சடுதியாக ஓட்ட முனைந்தபோது நிலைதடுமாறிய 56 வயதான குடும்பஸ்த்தர் உழவு இயந்திரத்தின் சக்கரத்திற்குள் விழுந்து உயிரிழந்திருப்பதாக தொிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு