யாழ்.நகரில் இளைஞன் மீது கத்திக்குத்து..! ஆபத்தான நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி, 3 பேர் கொண்ட கும்பல் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் இளைஞன் மீது கத்திக்குத்து..! ஆபத்தான நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி, 3 பேர் கொண்ட கும்பல் துணிகரம்..

யாழ்.பிரதான வீதியில் 2ம் குறுக்கு தெரு பகுதியில் 3 பேர் கொண்ட வன்முறை கும்பலின் கத்திக்குத்துக்கு இலக்கான 41 வயதான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு மோட்டார் சைக்களில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள் திருத்தும் இடத்தில் நின்ற நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சம்பவத்தில் காயமடைந்தவர் தி.தினேஸ் (வயது 41) என கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த நபர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு