தடைப்படும்!
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.00மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மிருசுவில், மிருசுவில் படித்த மகளிர் குடியிருப்புத் திட்டம், மிருசுவில் இராணுவ முகாம், எழுதுமட்டுவாள் பிரதேசம், மருதங்குளம், Tokeyo Cement கொம்பனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.