யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய விக்டர் டிலான், தனுரொக் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய விக்டர் டிலான், தனுரொக் கைது..!

யாழ்.மாவட்டத்தில் பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய விக்டர் டிலான் மற்றும் தனுரொக் என்ன இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மானிப்பாய் பொலிஸ் நிலைய இரகசிய போலிஸார் நவாலியில் இன்று மாலை முன்னெடுத்த நடவடிக்கையின் போது, அவர்களைக் கண்டுவிட்டு தப்பி ஓட முற்பட்ட போதே இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வீடொன்று மீது பெற்றோல் குண்டு வீசிய வழக்கில் விக்டர் டிலான் சந்தேக நபராக உள்ளார் என்று குறிப்பிட்ட பொலிஸார், தனு ரொக்குக்கு எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் கூறினர். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் 

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு