யாழ்.தெல்லிப்பழை- மாவைகலட்டி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை புலி..! 19 ஆடுகளை கடித்து குதறியது, பீதியில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை- மாவைகலட்டி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை புலி..! 19 ஆடுகளை கடித்து குதறியது, பீதியில் மக்கள்..

யாழ்.தெல்லிப்பழை - மாவைகலட்டி கிராமத்திற்குள் புகுந்து சிறுத்தை புலி ஒன்று வீடொன்றிலிருந்த 13 ஆடுகளை கடித்து காயப்படுத்தியுள்ளதுடன், 6 ஆடுகளை கொன்றுள்ளது. 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. கிராமத்திற்குள் புகுந்த புலி வீட்டில் பட்டியிடப்பட்டு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளை கடித்து குதறியுள்ளது. 

இதில் 13 ஆடுகள் காயமடைந்ததுடன், 6 ஆடுகளை கொன்றிருக்கின்றது. குறித்த சிறுத்தை புலி எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது என்பது தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், 

குறித்த புலியை அந்த சூழலில் உள்ள யாராவது வளர்க்கிறார்களா? என சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு