யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்குள் சிவில் உடையில் பொலிஸார்..! சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட 3 பேர் இன்று மாலை கைது..
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமானமுறையில் நடமாடிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்களை குறிப்பாக இளம் பெண்களை அசௌகரியத்திற்குள்ளாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் சிவில் உடையில் களமிறக்கப்பட்ட பொலிஸார் இன்றுமாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்,
சந்தேகத்துக்கிடமான முறையில் மூன்று இளைஞர்களை நடமாடியுள்னர்.இதன் போது பொலிஸார் விசாரனை செய்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர். இதனால் குறித்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பரந்தன் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள்
என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.