யானைக்கு போட்ட மின் வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி..!

ஆசிரியர் - Editor I
யானைக்கு போட்ட மின் வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி..!

காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கி ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

நேற்று இரவு இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் கரவெட்டியாறு கிராமத்தில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தந்தையான முனிசாமி தங்கையா (வயது 58) என்பவரும் 

அவரது மைத்துனனான 7 பிள்ளைகளின் தந்தை சீனித்தம்பி மணிவண்ணன் (வயது 51) ஆகியோரே பலியாகியுள்ளனர்.

காட்டு யானைகளிடமிருந்து விளைந்த நெல் வயல்களைப் பாதுகாப்பதற்காக கம்பிகளில் பாய்ச்சப்பட்ட மின்சாரம் தாக்கியதிலேயே இந்த இருவரும் பலியானதாக 

ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.வழமைபோல தமது நெல் வயல் காவலில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகளை 

இவர்கள் தொட்டுள்ளனர்.அவ்வேளையில் ஸ்தலத்திலேயே இவர்கள் துடிதுடித்து இறந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு